கடலூர் நகருக்கு அருகில் உள்ளது.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம். ஐந்து புலியூர் தலங்களுள் ஒன்று. திருநாவுக்கரசரை சமணர்கள் கல்லில் கட்டி கடலில் தள்ளிவிட, அவர் "சொற்றுணை வேதியன்" என்ற நமச்சிவாயப் பதிகம் பாடி கரையேறிய தலம். அவர் கரையேறிய இடம் "கரையேற விட்ட குப்பம்" என்று அழைக்கப்படுகிறது. அகத்தியர், உபமன்யு முனிவர், அக்கினி ஆகியோர் வழிபட்ட தலம். சாபத்தினால் முடமான கால் உள்ள முயலாக மாறிய மங்கணர் என்னும் முனிவர் சாபம் நீங்கப் பெற்ற தலம். |